ஜனத்தொகையில் இன அம்சங்கள் : இந்திய Anthropology இயக்குநர் டாக்டர்.பி.எஸ்.குஹா அவர்களால் எழுதப்பட்டு இந்திய அரசால் 1950ம் ஆண்டு கல்கத்தாவில் வெளியிடப்பட்டது இந்நூல். தனித்ததொரு கலப்பில்லாத இனமென்று இவ்வுலகில் எதுவும் கிடையாது.Paleolithic காலம் முதல் வரலாற்று காலம் வரை நடந்த இனக்கலப்புகளை இந்நூல் கூறுகிறது.நம் இந்தியா முழுவதும் உள்ள மக்களை ஆறு பெரிய இனங்களில் ஆசிரியர் அடைக்கிறார். தற்போது ஆசிரியரின் கருத்துகளில் நிறைய முரண்பாடுகள் இருந்தாலும், 70 வருடம் முன்பு எழுதப்பட்ட அருமையான ஆய்வுநூல்.
தமிழ் எண்ணும் எழுத்தும்: தஞ்சை சரஸ்வதிமகால் நூலக பண்டிதர் திரு.மணி.மாறன் அவர்களால் எழுதப்பட்ட முக்கியநூல் இது.தமிழ்எண்கள், எழுத்துகள் அடைந்த மாற்றங்கள், சுவடியின் வரலாறு, பழமையான நூல்களில் உள்ள ஆண்டு கணக்கீடூ, பண்டைய அளவை முறைகள், சிற்பஅளவீடுகள், காகித ஆவணங்களிலுள்ள சொற்றொடர்கள், கிரந்த, தமிழி,வட்டெழுத்துகள் போன்றவற்றை பற்றி எளியமுறையில் அனைவரும் அரியும்வண்ணம் எழுதப்பட்ட நூல்.
Comments
Post a Comment